Published : 11 Oct 2023 05:26 AM
Last Updated : 11 Oct 2023 05:26 AM

சிக்கிம் மாநிலத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 400 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்

கோப்புப்படம்

புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பில் ஏற்பட்ட கனமழை காரணமாக தீஸ்தா நதியில் கடந்த வாரம் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் சேதம் அடைந்தன. இதில் 10 ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்த நிலையில் 105 பேரை காணவில்லை. இங்கு ராணுவம், விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிக்கிமில் வெள்ள பாதிப்பு பகுதிகளை ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த 2 நாட்களாக பார்வையிட்டார்.

விமானப்படையில் உள்ள எம்ஐ-17 மற்றும் சினுக் ரக ஹெலிகாப்டர்கள், வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கியிருந்த சுற்றுலா பயணிகள் 354 பேரை மீட்டு பாக்யாங் விமான நிலையம் கொண்டு வந்தது. லாச்சென் பகுதியிலிருந்து 45 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் ஹெலிகாப்டர்களில் மீட்டு மங்கன் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x