Published : 07 Dec 2017 03:55 PM
Last Updated : 07 Dec 2017 03:55 PM

பள்ளிகளில் பகவத் கீதை சார்ந்த போட்டிகள்; யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை தொடர்பான பாட்டுப் போட்டிகளை நடத்துமாறு பள்ளிகளுக்கு யோகி ஆதித்யநாத் அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து இயக்குநர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள மாநில இடைநிலைக் கல்வித் துறை, பள்ளிகளுக்கு இடையேயும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

உ.பி. கூடுதல் தலைமைச் செயலாளர் இதுபற்றி இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வித்துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ''பால கங்காதர திலகர் எழுதிய 'பகவத் கீதை' குறித்த விளக்க உரையான 'கீதை ரகசியம்' என்னும் புத்தகத்தின் அடிப்படையில் பாட்டுப் போட்டி அமையும்.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் 10 பாடகர்கள் அல்லது குழுக்கள், டிசம்பர் 29 அன்று மாநில அளவில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வர். பால கங்காதர திலகரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் நடத்தப்படும் விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்வார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள கடிதத்தில் பால கங்காதர திலகர் குறித்து எதுவும் கூறப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x