Published : 13 Dec 2017 09:02 PM
Last Updated : 13 Dec 2017 09:02 PM

ராகுல் காந்தி நேர்காணலை ஒளிபரப்பிய தொலைக்காட்சி சேனல்கள் மீது எஃப்.ஐ.ஆர். : தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறும் விதமாக உள்ளதால் ராகுல் காந்தியின் நேர்காணல்களை ஒளிபரப்பிய அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் மீதும் முதல் தகவலறிக்கை பதியுமாறு குஜராத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சேனல்கள் உடனடியாக ராகுல் காந்தி நேர்காணல் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற வேண்டிய நிலையில் ராகுல் காந்தியின் நேர்காணலை ஒளிபரப்புவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமானது என்று தேர்தல் ஆணையம் இந்த அறிவுறுத்தலை மேற்கொண்டுள்ளது.

நாளை (வியாழன்) குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது, இந்நிலையில் ராகுல் காந்தி குஜராத் சட்டமன்ற தேர்தல் பற்றி பேசும் நேர்காணல் ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் இது சட்ட விரோதமானது என்றும் புகார்கள் எழுந்ததையடுத்து தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x