Published : 15 Dec 2017 11:13 AM
Last Updated : 15 Dec 2017 11:13 AM
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தாமதமானது. குஜராத்தில் நேற்று (வியாழக்கிழமை) கடைசி கட்ட தேர்தல் முடிந்ததை அடுத்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
முன்னதாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடி செய்தியாள்களிடம் கூறியதாவது:
"நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என நம்பிக்கை. இந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனக்கூறினார்.
முன்னதாக கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த நேற்று மாலை அனைத்துக் கூட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் இருக்கும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடியுரிமை சட்டம் 1955, மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் தேசிய ஆணையம் சட்டம் ஆகியவற்றை சட்டத்திருத்தம் செய்ய 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 15 முதல் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT