Published : 22 Dec 2017 03:51 PM
Last Updated : 22 Dec 2017 03:51 PM
ஹைதரபாத்தில் காதல் தோல்வி விரக்தியால் வாலிபர் ஒருவர் பொது மக்கள் மத்தியில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஹைதரபாத்திலுள்ள லாலாகுடாவில் வியாழக்கிமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து துணை போலீஸ் போலீஸ் கமிஷ்னர் பி. சுமதி, தி இந்து (ஆங்கிலம்) இதழுக்குக் கூறும்போது, சந்தியா ராணி என்ற இளம்பெண். லாலாகுடா நகரில் உள்ள அலுமினிய கடை ஒன்றில் கணினி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் வீட்டுக்கு திரும்பும்போது சுமார் 6.45 மணியளவில் அவரை பின் தொடர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 70 % காயங்களுடன் சந்தியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கார்த்திக்கும், சந்தியாவும் ஒரே கடையில் பணிபுரிந்து வந்துள்ளனர். அங்கு இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்துக்கும் முன்னர் கார்த்திக் அந்த கடையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஒருவாரத்துக்கு கார்த்தி சந்தியாவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பணியை விடும்படி கூறியிருக்கிறார். ஆனால் சந்தியா அதனை மறுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சந்தியாவை கார்த்திக்கை கொல்ல திட்டமிட்டிருக்கிறார் என்றார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கார்த்திக் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT