Published : 22 Apr 2014 02:45 PM
Last Updated : 22 Apr 2014 02:45 PM

தன்பாலின உறவு சீராய்வு மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தன்பாலின உறவு தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

தன்பாலின உறவு சட்ட விரோதம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதன் மீதான மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி உறுதி செய்தது. மேலும் இந்த தீர்ப்பு மீதான மறு ஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் வேறொரு வழக்கில் திருநங்கைகளுக்கு ‘மூன்றாவது பாலினம்’ என்று சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து கடந்த 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மாற்றம் காரணமாக தன்பாலின உறவு தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தொண்டு நிறுவனமான ‘நாஸ் பவுண்டேஷன்’ உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி, தலைமை நீதிபதி பி.சதாசிவம் முன் வாதிட்டார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிப்பதாக கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x