Published : 25 Jul 2014 08:01 PM
Last Updated : 25 Jul 2014 08:01 PM

இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி

இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டத்தில் விழுந்துத் தீப்பிடித்ததில் அதில் இருந்த 7 பேரும் பலியாகியுள்ளனர்.

உயர் தொழில்நுட்ப ரகத்தைச் சேர்ந்த துருவ் ஹெலிகாப்டர் பரேலியிலிருந்து புறப்பட்டது. அடாரியா பகுதியில் உள்ள மனிபூர்வாவில் விழுந்ததில் ஹெலிகாப்டர் தீப்பிடித்தது. அதில் உள்ள 7 பேரும் பலியாகியுள்ளனர்.

விங் கமாண்டர், ஸ்க்வாட்ரன் லீடர், ஜூனியர் வாரண்ட் ஆபீசர், உட்பட 7 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்திற்கு முன் பைலட் அவசர அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு ரேடியோ மற்றும் ராடார் தொடர்பு இழக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 5 வீரர்களும் 2 பைலட்களும் இருந்துள்ளனர். ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை.

பரேலியிலிருந்து மதியம் 3.53 மணிக்குப் புறப்பட்ட ஹெலிகாப்டர் 5 மணிவாக்கில் விழுந்து தீப்பிடித்தது.


இந்த விபத்துக் குறித்து இந்திய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x