Published : 27 Dec 2017 06:17 PM
Last Updated : 27 Dec 2017 06:17 PM
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் புதுடெல்லி அரசுடன் இணைந்து மாநகரம் முழுவதும் 12 இடங்களில் தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்களை ஏற்படுத்த உள்ளது.
இந்நிறுவனம், புதுடெல்லியின் முக்கிய இடங்களில் ஓட்டுநர் தேர்வு மையங்களை நிறுவுவவதற்காக ரூ.15 கோடியை புதுடெல்லி அரசின் போக்குவரத்துத் துறையிடம் ஒப்படைத்துள்ளது. மையங்கள் மற்றும் அதன் நடவடிக்கைகளை ஆணையம் போக்குவரத்து துறை முடிவு செய்யும் என்று மாருதி சுஸுகி இந்தியா லிட். வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தக் குறிப்பாணையின்படி அரசுத் துறைக்கும் மாருதி நிறுவனத்துக்கும் இடையில் இன்று கையெழுத்திடப்படும் பணிகள் நிறைவடைந்தன. இம் மையங்கள் பரிசோதனைப் பாதைகளின் வழியே செல்லும்போது பரிசோதனைக்குட்படுத்தத்க்க வகையில் உருவாக்கப்பட உள்ளன. உயர் வரையறை கேமராக்கள் ஓர் ஒருங்கிணைந்த ஐடி பிரிவோடு இணைக்கப்பட்டிருக்கும். இதற்கு துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம், மையங்களை நிறுவி, அதை மூன்றாண்டுகளுக்கு பராமரித்து வருகையில், போக்குவரத்துத் துறை வாகன ஓட்டிகளுக்கு பரீட்சைகளை வைக்கும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகளை மேற்கொள்ளும்.
இதன் முதற்கட்டமாக, ஹாஸ் காஸ், ஷாகுர் பாஸ்டி, ராஜா கார்டன், ஹாரி நகர், புராரி, லோனி ரோடு, சராரி காலே கான், ரோஹினி, ஜாரோடா காலன், மயூர் விஹார் பேஸ் 1, சுராஜ்மால் விஹார் மற்றும் துவாரகா ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்எஸ்ஐஎல் நிறுவனம் இந்தியா முழுவதும பல்வேறு பங்குதாரர்களின் டீலர்களுடன் இணைந்து 430 ஓட்டுநர் பயிற்சி மையங்களை நடத்திவருகிறது. இது மட்டுமின்றி மாநில அரசுகளுடன் இணைந்து ஆறு ஐடிடிஆர் (ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம்) மையங்களையும் நிர்வகித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT