Published : 12 Apr 2014 01:00 PM
Last Updated : 12 Apr 2014 01:00 PM
கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் நடிகை ரம்யாவின் உண்மையான அப்பா யார் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என சி.வெங்கடேஷ் பாபு என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகை ரம்யா, தன்னுடைய வேட்பு மனுவில் ஆர்.டி.நாராய ணன் என்பவரை தனது தந்தை யாக குறிப்பிட்டுள்ளார். ரம்யாவை தத்தெடுத்த ஆர்.டி. நாராயணன் என்பவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இந்நிலையில் நடிகை ரம்யாவை தன்னுடைய சொந்த மகள் என கூறிவந்த சி.வெங்கடேஷ் பாபு, பெங்களூர் சிட்டி சிவில் நீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘மண்டியா தொகுதியில் போட்டியிடும் நடிகை ரம்யா தன்னுடைய தந்தை இறந்து விட்டதாக வேட்புமனுவில் குறிப் பிட்டுள்ளார். மறைந்த ஆர்.டி.நாராயணன் ரம்யாவை தத்தெடுத்து வளர்த்தவர் மட்டும் தான். ரம்யாவின் உண்மையான அப்பா நான்தான். என்னை மறைத்துவிட்டு வேட்புமனுவில் தவறான தகவல் அளித்திருப்பது சட்டபடி குற்றமாகும். நடிகை ரம்யா என்னை அப்பாவாக ஏற்க மறுக்கும் பட்சத்தில், அவருடைய உண்மையான அப்பா யார் என்பதை நடிகை ரம்யா நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரி வித்த நடிகை ரம்யா, ‘‘என்னுடைய அப்பா எனக்கூறிவரும் சி.வெங்க டேஷ்பாபு என்பவர் யாரென்றே எனக்கு தெரியாது. இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி'' என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT