Published : 22 Dec 2017 10:00 AM
Last Updated : 22 Dec 2017 10:00 AM

சசி தரூர் விளக்கம்

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை காங்கிரஸ் கூட்டணி அரசு குறைவான விலைக்கு விற்றதாகவும் இதில் ஊழல் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் பேட்டியளித்த சசி தரூர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் கிடைத்ததைவிட இப்போதைய ஆட்சியில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்ததாக பாஜக கூறுகிறது. தொலைபேசி அழைப்புகள் மக்களுக்கு குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் குறைவான விலைக்கு விற்பனை செய்தது. இப்போதைய அரசு கஜானாவை நிரப்ப 2ஜி அலைக்கற்றையை அதிக விலைக்கு விற்றது. கொள்கை முடிவுதான் காரணமே தவிர 2ஜி விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x