Last Updated : 09 Dec, 2017 07:05 AM

 

Published : 09 Dec 2017 07:05 AM
Last Updated : 09 Dec 2017 07:05 AM

பசுக்கள் கடத்தல்: என்கவுன்ட்டரில் ஒருவர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ஜனதா காலனியிலுள்ள ஒரு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு சிலர் பசுக்களை லாரியில் கொண்டு சென்றதை ரோந்துப் பணியிலிருந்த 2 போலீஸார் பார்த்துள்ளனர். போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்த முயற்சித்த போது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பதிலுக்கு போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தலீம் என்பவர் இறந்தார். மற்றவர்கள் தப்பிச் சென்றனர்.

லாரியிலிருந்த 5 பசுக்கள் மீட்கப்பட்டன. மேலும் நாட்டுத் துப்பாக்கி, செல்போன், ஒரு டைரி, துப்பாக்கிக் குண்டுகளும் லாரியில் இருந்து கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக சிஐடி-சிபி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x