Published : 13 Sep 2023 07:28 AM
Last Updated : 13 Sep 2023 07:28 AM

திருமலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும், தெலுங்கு வருடப் பிறப்பு (உகாதி), பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம்மற்றும் வைகுண்ட ஏகாதசிக்குமுந்தைய செவ்வாய்க்கிழமைகளில் ‘கோயில் ஆழ்வார் திரு மஞ்சனம்’ நடைபெறும்.

இதன்படி, வரும் 18-ம்தேதி தொடங்கவுள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் கர்ப்ப கிரகம், பலி பீடம், கொடிக்கம்பம், விமான கோபுரம், உப சன்னதிகள் என அனைத்து இடங்களும் பச்சை கற்பூரம், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருட்களால் ஆன திரவத்தால் சுத்தம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x