Published : 13 Dec 2017 10:19 AM
Last Updated : 13 Dec 2017 10:19 AM

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்க 6 வார அவகாசத்தை கடந்த நவம்பர் 1-ம் தேதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் பிரதிநிதிகள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது.

இதுபோன்ற நீதிமன்றங்கள் அமைக்க ஆகும் செலவுகள் குறித்த தகவல்களை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் 2014-ம் ஆண்டு முதல் 1,581 குற்ற வழக்குகள் எம்பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ளன. 2014-க்குப் பிறகு புதிதாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விவரத்தையும் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x