Last Updated : 18 Dec, 2017 11:34 AM

 

Published : 18 Dec 2017 11:34 AM
Last Updated : 18 Dec 2017 11:34 AM

மும்பையில் தீ விபத்து: கடை ஊழியர்கள் 12 பேர் பரிதாப பலி

மும்பையில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அக்கடையின் ஊழியர்கள் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "மும்பையின் சகி நாகா குர்லா பகுதியில் உள்ள கைரானி பகுதியில் உள்ளது பானு ஃபர்சான் கடை. இந்தக் கடையில் அதிகாலை 4.25 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அக்கடையின் சுவர்கள் சரிந்தன. இதில் அக்கடையில் பணிபுரிந்த நபர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். எனினும் சிகிச்சைக்கு முன்பாகவே 12 பேரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது" என்றனர்.

அக்கடையில் வேலை பார்த்த 6 பணியாளர்கள் அந்த தீ விபத்திலிருந்து தப்பிச் சென்றதாக தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x