Last Updated : 19 Dec, 2017 09:09 AM

 

Published : 19 Dec 2017 09:09 AM
Last Updated : 19 Dec 2017 09:09 AM

கூட்டணி வைத்திருந்தால் காங்கிரஸ் வென்றிருக்கும்: தேசியவாத காங். பிரபுல் பட்டேல் கருத்து

எங்களுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருந்தால் குஜராத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் தெரிவித்தார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரபுல் பட்டேல் நேற்று கூறும்போது, “முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் அமைந்தபோது காங்கிரஸ் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்திருந்தது. அதைப் போலவே மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியோடு நாங்கள் கூட்டணி வைத்திருந்தோம்.

ஆனால் இப்போது கூட்டணி வைக்கவில்லை. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்திருந்தால், குஜராத் தேர்தலில் கூடுதல் இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றிருக்க முடியும்.

இந்தத் தேர்தலின்போது ஜிஎஸ்டி வரி விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. ஆனால் அதை மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு சரி செய்து விட்டது. மேலும் கோபமாக இருந்த வர்த்தகர்களையும் மத்திய அரசு அமைதிப்படுத்தி விட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டது மத்திய அரசு” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x