Published : 15 Dec 2017 10:06 AM
Last Updated : 15 Dec 2017 10:06 AM
பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவை சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாயாருக்கு விசா வழங்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சாட்டி, குல்பூஷன் ஜாதவை அந்நாட்டு ராணுவம் கடந்த ஆண்டு கைது செய்தது. பின்னர், அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டதன் பேரில், மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்குமாறு அவரது மனைவியும், தாயாரும் இந்திய அரசு மூலம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை முதலில் நிராகரித்த பாகிஸ்தான், பின்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்றது. அதன் தொடர்ச்சியாக, குல்பூஷனை அவரது மனைவியும், தாயாரும் டிச 25-ம் தேதி சந்திக்கலாம் என்று பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில், குல்பூஷனின் மனைவிக்கும், தாயாருக்கும் உடனடியாக விசா வழங்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT