Published : 23 Apr 2014 08:45 AM
Last Updated : 23 Apr 2014 08:45 AM

அமைச்சர் ஹெலிகாப்டரில் இருந்து ரூ.1.75 லட்சம் பறிமுதல்

குஜராத் அமைச்சர் புருஷோத்தம் சோலங்கியின் ஹெலிகாப்டரில் இருந்து ரூ.1.75 லட்சத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

முதல்வர் நரேந்திர மோடி அரசில் மீன் வளத் துறை அமைச் சராகப் பணியாற்றும் சோலங்கி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை அவர் ராஜ்கோட் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அவர் ஹெலிகாப்டரில் ஜாஸ்தன் என்ற பகுதிக்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஹெலி காப்டரை சோதனை செய்தனர். அதில் ரூ.1.75 லட்சம் ரொக்கம் இருந்தது. அரசியல் தலைவர்கள் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக பணம் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அதற்கு அதிகமாக பணம் இருந்ததால் ரூ.1.75 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x