Published : 09 Dec 2017 07:29 AM
Last Updated : 09 Dec 2017 07:29 AM
குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்துக்குச் சென்ற சுவாமி நாராயணன் அமைப்பின் துறவி மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டம் விசாவதார் டவுன் அருகே இந்தத் தாக்குதல் நேற்று முன்தினம் நடந்தது. சுவாமி நாராயணன் ஹிந்து அமைப்பின் துறவி சுவாமி பக்திபிரசாத். இவர் விசாவதார் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கிரீத் பட்டேலுக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு காரில் சென்றார். அப்போது இவரது காரை வழிமறித்த 2 பேர், இரும்புக் கம்பிகளால் துறவி பக்திபிரசாரத்தைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் காரில் வந்து, துறவியின் காரை வழிமறுத்துள்ளனர். பின்னர் துறவியைத் தாக்கிவிட்டு காரைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக விசாவதார் டவுன் போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT