Published : 19 Dec 2017 09:22 AM
Last Updated : 19 Dec 2017 09:22 AM
‘‘குஜராத், இமாச்சலில் கிடைத்த தேர்தல் வெற்றி, பிரதமர் மோடி அரசின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் மிகப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளுக்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் அங்கீகாரம் அளித்துள்ளன’’ என்று தெரிவித்தார். ராஜ்நாத் சிங் கருத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT