Last Updated : 07 Nov, 2017 10:52 AM

 

Published : 07 Nov 2017 10:52 AM
Last Updated : 07 Nov 2017 10:52 AM

வருமான வரி அலுவலகத்தில் குடும்பத்தினருடன் ஆஜர்: கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை

வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார், அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குஜராத் மாநிலங்களவை தேர்தலின்போது பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் செய்து கொடுத்தார். இந்நிலையில் டி.கே.சிவக்குமார், அவரது தம்பியும், எம்பியுமான டி.கே.சுரேஷ் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அடுத்தகட்ட விசாரணைக்காக அமைச்சர் டி.கே.சிவகுமார், மனைவி உஷா, தாய் கவுரம்மாவுடன் நேற்று பெங்களூருவில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஆஜரானார். அவரது தம்பியும் எம்பியுமான டி.கே.சுரேஷ் குடும்பத்தினருடன் விசாரணைக்கு ஆஜரானார். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 4 மணி வரை நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x