Published : 22 Nov 2017 02:25 PM
Last Updated : 22 Nov 2017 02:25 PM
குஜராத்தில் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு போராட்டம் நடத்தியபோது, அதை திரும்பப் பெற பாஜக 1,200 கோடி ரூபாய் பேரம் பேசியதாக படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழுத் தலைவர் ஹர்திக் படேல் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான காங்கிரஸின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஹர்திக் படேல் இன்று அறிவித்தார்.
இதை தொடர்ந்து அவர் கூறியதாவது:
‘‘குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் முதல் இலக்கு. படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டத்தை சீர்குலைக்க பல வழிகளிலும் பாஜக செயல்பட்டது. போராட்டத்தை திரும்பப் பெற பாஜக 1,200 கோடி ரூபாய் பேரம் பேசியது. படேல் சமூகத்தை வஞ்சிக்க நினைக்கும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.
பாஜகவை வீழ்த்துவது என்பதே, காங்கிரஸூக்கு ஆதரவுதான். எனவே காங்கிரஸூக்கு ஆதரவளிப்பதாக தனியாக அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. படேல் சமூகத்தினருக்கு காங்கிரஸ் உரிய அங்கீகாரம் அளிக்கும் என நம்புகிறேன்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT