Published : 23 Nov 2017 09:29 AM
Last Updated : 23 Nov 2017 09:29 AM

பாஜக தலைவர்களை கொல்ல ஜெய்ஷ்-இ-முகமது சதி திட்டம்

பாஜக மூத்த தலைவர்களைக் கொல்ல ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக அந்த அமைப்பின் இலக்கில் உள்ள தலைவர்களின் பட்டியலை தயாரித்துள்ளதாகவும் மத்திய உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

பாஜகவின் மூத்த தலைவர்களைக் கொல்ல பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அமைச்சர்களாக இருக் கும் சிலரையும் கொல்ல அந்த இயக்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற் காக கொலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களை கொலை செய்ய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார், பயிற்சி பெற்ற தீவிரவாதிகளைக் கொண்ட தனிப்படை அமைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் சேர்ந்து இந்த சதியை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு தீவிரவாத இயக்கங்களும் வங்கதேசத்தில் குழு அமைத்து செயல்படுகின்றன. இதில் சில தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முதல் அமைச்சர் ஒருவரைக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் மருமகன் கொல்லப்பட்ட நிலையில், இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அசாரின் மருமகனுடன் மேலும் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x