Published : 29 Nov 2017 10:03 AM
Last Updated : 29 Nov 2017 10:03 AM

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா அடங்கிய பிரிக்ஸுக்காக தனி இணைய சேவை

பிரிக்ஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளுக்காக தனி இணைய சேவையை தொடங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

உலகளாவிய அளவில் பல்வேறு காரணங்களால் அவ்வப்போது இணையதள சேவை பாதிக்கப்படுகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்காக மட்டும் தனி இணைய சேவையைத் தொடங்க ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளில் புதிய இணைய திட்டம் அமலுக்கு வரும்போது சர்வதேச அளவில் இணைய சேவை பாதிக்கப்பட்டாலும் பிரிக்ஸ் நாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கடந்த 2014-ம் ஆண்டில் ரஷ்யாவுக்காக தனி இணைய சேவையை அந்த நாடு தொடங்கியது. இத்திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பிரிக்ஸ் நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியபோது, சர்வதேச இணையத்தை நிர்வகிப்பது யார் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் ரஷ்யா உட்பட பல்வேறு உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனவே ரஷ்யாவின் உள்நாட்டு பாதுகாப்புக்காக தனி இணைய சேவையை தொடங்கினோம். அதற்காக உலக இணைய வலைதளத்தில் இருந்து ரஷ்யா வெளியேறிவிட்டது என்று அர்த்தம் கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x