Published : 21 Nov 2017 05:22 PM
Last Updated : 21 Nov 2017 05:22 PM

முத்தலாக்கை முடிவுக்குக் கொண்டு வர புதிய சட்டம்: அமைச்சரவைக் குழு அமைத்தது மத்திய அரசு

 

உடனடி முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய சட்டத்தை உருவாக்க அமைச்சரவை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டம் அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் உடனடி முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''உடனடி முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதைத் தொடர்ந்து அமைச்சரவை குழு அமைக்கப்பட்டது. இக்குழு, புதிய சட்ட மசோதாவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது''எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x