Last Updated : 24 Nov, 2017 11:37 AM

 

Published : 24 Nov 2017 11:37 AM
Last Updated : 24 Nov 2017 11:37 AM

உத்தரப் பிரதேசத்தில் பாட்னா விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 3 பேர் பலி

வாஸ்கோடகாமா பாட்னா விரைவு ரயில் உத்தரப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "வாஸ்கோடகாமா பாட்னா விரைவு ரயில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4. 14 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் சித்ராகுட் மாவட்டத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் அந்த ரயிலில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் பலியானவர்களில் இருவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பிஹாரைச் சேர்ந்த தந்தை, மகன். மேலும் காயமடைந்த 9 பேரும் சித்ராகுட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்"என்றார்.

விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ரயில்வே அமைச்சர் இரங்கல்

இந்த விபத்து குறித்து மத்திய  ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், விபத்தில் பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் வாஸ்கோடகாமா ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு தொகையாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x