Last Updated : 22 Nov, 2017 06:08 PM

 

Published : 22 Nov 2017 06:08 PM
Last Updated : 22 Nov 2017 06:08 PM

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் வீரர் பலி

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர் ஒருவர் பலியானார்.

இந்த சம்பவம் புதன்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சகம் தரப்பில் இதுகுறித்துக் கூறும்போது, ''கெரான் பகுதியின் சோக்கன் போஸ்டில் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x