உத்தராகண்ட் மாநிலத்தில் பயங்கர நிலச்சரிவு: 12 பேரை காணவில்லை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், ருத்ரபிரயாக் பகுதியில் நேற்று கனமழையால் கவுரிகுந்த் என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தாழ்வான பகுதிகளில் 3 கடைகள் பலத்த சேதம் அடைந்தன. அந்தக் கடைகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், 12-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, போலீஸ், தீயணைப்புத் துறை உட்பட பல துறை வீரர்கள் சம்பவ பகுதியில் உள்ளனர் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in