Last Updated : 15 Nov, 2017 12:59 PM

 

Published : 15 Nov 2017 12:59 PM
Last Updated : 15 Nov 2017 12:59 PM

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை அன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது இன்று (புதன்கிழமை) பாகிஸ்தான் ராணுவம் காலை 8.15 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக தானியங்கி ஆயுதங்கள், பீரங்கிகள் ஆகியவற்றைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் வலுவான பதிலடி கொடுக்கப்பட்டது" என்றார்.தொடர்ந்து இரு தரப்புக்கும்இடையே சண்டை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் 2-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரின் சம்பா பகுதியில் நடத்திய தாக்குதலில் பிஎஸ்எப் வீரர் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x