Last Updated : 04 Nov, 2017 01:14 PM

 

Published : 04 Nov 2017 01:14 PM
Last Updated : 04 Nov 2017 01:14 PM

அமெரிக்காவில் சீக்கிய சிறுவன் மீது தாக்குதல்: இந்திய தூதரகத்திடம் அறிக்கை கோரினார் சுஷ்மா

வாஷிங்டனில் சீக்கிய சிறுவன் மீது நடத்தப்பட்டப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை கோரியுள்ளார்.

என்ன நடந்தது?

வாஷிங்டனின் கென்ட் நகரத்தில் உள்ள கென்ட்ஃப்ரிட்ஜ் உயர் பள்ளியில், 14 வயது சீக்கிய சிறுவன் சக வகுப்புத் தோழனால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் அக்.26-ம் தேதி நிகழ்ந்துள்ளது.

இதுபற்றி வெளியான வீடியோ பதிவில், சிறுவன் பல முறை உதைக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்படுகிறார்.

அவரின் தந்தை, சிறுவன் இந்திய வம்சாவளி என்பதாலேயே தாக்கப்பட்டான் என்று குற்றம் சாட்டினார். ஆனால் இதை மறுத்துள்ள பள்ளி நிர்வாகம், இந்தத் தாக்குதலில் இனவெறியோ, மதவெறியோ இல்லை என்று தெரிவித்தது.

ட்விட்டர் பதிவு

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா, ''அமெரிக்காவில் சீக்கிய சிறுவன் தாக்கப்பட்டது குறித்த செய்திகளைப் பார்த்தேன். சம்பவம் தொடர்பாக அறிக்கையை இந்திய தூதரகத்திடம் கேட்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

— Sushma Swaraj (@SushmaSwaraj) November 4, 2017

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x