Last Updated : 30 Nov, 2017 05:10 PM

 

Published : 30 Nov 2017 05:10 PM
Last Updated : 30 Nov 2017 05:10 PM

காதலித்த பெண்ணின் அன்பைப் பெற தன்னைத் தானே எரிக்க முயன்ற டெல்லி இளைஞர்

காதலித்த பெண்ணின் அன்பைப் பெற தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற இளைஞரை விசாரித்து வருகின்றனர் டெல்லி காவல்துறையினர்.

இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறும்போது, ''19 வயது இளைஞர் திலிப், தனது வீட்டருகே வசித்து வரும் 17 வயது இளம்பெண்ணைக் கவர இவ்வாறு நடந்துள்ளார்.

முன்னதாக திலிப் தனது காதலை வெளிப்படுத்த 50 காதல் கடிதங்களை எழுதியுள்ளார். அதில் திலிப் தனது ரத்தத்தால் எழுதிய கடிதமும் அடக்கம்.

திலிப் எங்களை அணுகியபோது, நவம்பர் 23-ம் தேதி வட மேற்கு டெல்லியில் கஞ்ச்சாவாலா பகுதியில் திலிப் மற்றும் அவரின் தோழி சென்று கொண்டிருந்ததாகவும், அங்கு வந்து கலாட்டா செய்த இளைஞர்கள் மூவர் திலிப் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்றதாகவும் கூறினார்.

சந்தேகத்தின்பேரில் நடந்ததை அவரின் தோழியிடம் விசாரித்தோம். அப்போது திலிப்பே வாங்கி வைத்திருந்த பெட்ரோலைத் தன் மீது ஊற்றி, பற்றவைத்தது தெரிய வந்தது. அப்பெண்ணின் கண் முன்னாலேயே கொளுத்திக்கொண்டு அவரை ஈர்த்து, அன்பைப் பெற முயற்சி செய்துள்ளார்.

திலிப்பின் மார்புப்பகுதி மற்றும் பின்பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் அருகிலுள்ள மகரிஷி வால்மீகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x