Published : 24 Nov 2017 04:16 PM
Last Updated : 24 Nov 2017 04:16 PM

பத்திரிகையாளர் கொலை: திரிபுரா நாளிதழ்கள் தலையங்கத்தை வெற்றிடமாக்கி கண்டனம்

திரிபுராவில் பத்திரிகையாளர் சுதிப் தத்தா சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து, அம்மாநில நாளிதழ்கள் தமது தலையங்கப் பக்கத்தை வெற்றிடமாக விட்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

திரிபுராவின் 'ஸ்யந்தன் பத்திரிகா' நிருபர் சுதிப் தத்தாவுக்கும் அம்மாநில ஆயுதப் படை வீரருக்கும் தகராறு முற்றிய நிலையில், நவ.21-ம் தேதி சுதிப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஸ்யந்தன் பத்திரிகா, தைனிக் சம்பத் மற்றும் திரிபுரா தர்பான் ஆகிய நாளிதழ்கள் வியாழக்கிழமை அன்று தங்களின் தலையங்கப் பக்கத்தை வெற்றிடமாக்கி வடிவமைத்திருக்கின்றன.

முன்னதாக ராஜஸ்தான் அரசு கொண்டுவந்துள்ள கிரிமினல் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'ராஜஸ்தான் பத்ரிகா' எனும் செய்தித்தாள் தனது தலையங்கப் பகுதியைச் சுற்றி கறுப்பு பார்டர் இட்டு வெற்றிடமாக விட்டது.

கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நாளிதழ்கள், தங்கள் தலையங்கத்தை வெற்றிடமாக்கி கண்டனத்தைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x