காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ளகிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 110.55 அடியாக உயர்ந்துள்ளது.

இதுபோல் மைசூரு மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினிஅணையின் நீர்மட்டம் 2,283 அடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக வினாடிக்கு 30 ஆயிரம்கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in