Last Updated : 07 Nov, 2017 01:33 PM

 

Published : 07 Nov 2017 01:33 PM
Last Updated : 07 Nov 2017 01:33 PM

பனிமூட்டத்தால் விபத்து: பஞ்சாப்பில் 8 பேர் பலி

அடர்ந்த பனிமூட்டத்தால் பஞ்சாப்பில் பேருந்தும், ட்ரக்கும் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அன்று ஃபெரோஸ்பூர் - ஃபஸில்கா சாலையில், கரியா கிராமத்தின் அருகே நடந்துள்ளது.

இதுகுறித்துக் கூறிய காவல்துறை அதிகாரி, ''அப்பகுதியில் அடர்ந்த பனிமூட்டத்தின் காரணமாக சாலை தெளிவாகத் தெரியவில்லை. இதனாலே விபத்து நடந்துள்ளது.

ஃபெரோஸ்பூரில் இருந்து பஞ்சாப்பை நோக்கி பேருந்து வந்துள்ளது. அப்போது எதிரே வந்த ட்ரக் மீது பேருந்து மோதியது.

இதனால் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்'' என்றார்.

இதுகுறித்துக் காயமடைந்தவர்கள் தரப்பில் கூறும்போது, ''அதிகாரிகள் உரிய நேரத்தில் வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை'' என்று புகார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x