Published : 23 Nov 2017 01:14 PM
Last Updated : 23 Nov 2017 01:14 PM

லெப்டினன்ட் கர்னலின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி கைது

இமாச்சல பிரதேசத்தில் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி (கர்னல்) கைது செய்யப்பட்டார்.

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பணியாற்றி வரும் லெப்படினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவரின் 21 வயது மகள், தன்னை பயிற்சி மையத்தின் கர்னல், அவரது வீட்டில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் செளமியா விசாரணை நடத்தினார். அதில் இளம் பெண் அளித்த புகாருக்கு அடிப்படை ஆதாரங்கள் இருப்பது உறுதியானதையடுத்து ராணுவ அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x