சியாச்சினில் ஏற்பட்ட தீயில் ராணுவ அதிகாரி உயிரிழப்பு: 3 வீரர்கள் காயம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சியாச்சின்: லடாக் பகுதியிலுள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் அமைந்துள்ள முகாமில் நடந்த தீ விபத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 3 வீரர்கள் காயமடைந்தனர்.

லடாக்கின் லே பகுதியில் சியாச்சின் பனிச்சிகரம் அமைந்துள்ளது. சியாச்சின் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள ராணுவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து லே பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

அதிகாலை நடந்த தீ விபத்தில் சிக்கி கேப்டன் அன்ஷுமன் சிங் என்ற ரெஜிமெண்ட் மருத்துவ அதிகாரி உயிரிழந்தார். அப்போது ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதில் 3 ராணுவ வீரர்கள் மயங்கி விழுந்தனர். மேலும் அவர்களுக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in