Published : 13 Nov 2017 09:05 AM
Last Updated : 13 Nov 2017 09:05 AM

10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடாளுமன்றம் முன்பு 3 நாட்கள் தர்ணா

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து சிஐடியு உட்பட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடாளுமன்றம் முன்பு 3 நாட்கள் தர்ணா நடைபெற்றது.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து சிஐடியு, ஏஐடியூசி உட்பட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நாடாளுமன்றம் முன்பு தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரியால் ஏராளமான சிறு, குறு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று தர்ணாவில் பேசிய தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்த போராட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு உட்பட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x