Published : 17 Nov 2017 09:40 AM
Last Updated : 17 Nov 2017 09:40 AM

பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

திருச்சானூர் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலையில், பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதன் 2-ம் நாளான நேற்று காலையில் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் கதாயுதம் தாங்கி, அபய ஹஸ்தத்துடன் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது திரளான பக்தர்கள் வீதிகளின் இருமருங்கிலும் திரண்டு நின்று அம்மனை வழி்பட்டனர்.

இதில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள் ஆழ்வார் திவ்ய பிரபந்தத்தில் 2-ம் திருவடி பாடியபடி 4 மாட வீதிகளில் வலம் வந்தனர். இவர்களுடன் யானை, காளை, குதிரை போன்ற பரிவட்டங்கள், பல மாநில நடனக் கலைஞர்களும் நடனமாடியபடி பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் தாயார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x