Last Updated : 04 Nov, 2017 09:39 AM

 

Published : 04 Nov 2017 09:39 AM
Last Updated : 04 Nov 2017 09:39 AM

கன்னட கவிஞர் லக்ஷ்மண் காலமானார்

கன்னட கவிஞர் லக்ஷ்மண் (63) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் பெங்களூருவில் காலமானார்.

கர்நாடக அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சாதி ஒழிப்பு, சமத்துவம், பெண் விடுதலை, இந்துத்துவ எதிர்ப்பு தொடர்பாக ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார்.

காவிரி தொடர்பான கலவரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது கன்னட அமைப்புகளை கண்டித்து லக்ஷ்மண் குரல் கொடுத்தார். கடந்த 2009-ல் ஈழப்போரின் போது தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து பெங்களூருவில் தொடர் போராட்டங்கள் நடத்தினார்.

இவரது உடலுக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் ராசன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். குருகொண்ட பாளையா இடுகாட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x