உச்ச நீதிமன்ற விடுமுறை காலத்தில் 2,149 வழக்கு விசாரணை

உச்ச நீதிமன்ற விடுமுறை காலத்தில் 2,149 வழக்கு விசாரணை
Updated on
1 min read

புதுடெல்லி: நீதிமன்றங்களுக்கு ஆண்டுதோறும் 40 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் கீழ் மன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆண்டுதோறும் விடுமுறை அளிப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நீதிமன்றங்கள் ஜூலை 3-ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன. எனினும், கோடை விடுமுறையின்போது வழக்குகளை விசாரிக்க பல அமர்வுகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமைத்திருந்தார். அவற்றில் 15-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கோடை விடுமுறையில் பணியாற்றினர். அவர்கள் இந்த விடுமுறை நாட்களில் 2,149 வழக்களை விசாரித்துள்ளனர். அவற்றில் 700 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் முன் ஜாமீன், ஜாமீன், கட்டிடங்களை இடிக்க தடை அல்லது கட்டிடத்தில் இருந்து வெளியேற்ற தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் அடங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in