Published : 05 Jul 2014 11:08 AM
Last Updated : 05 Jul 2014 11:08 AM
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி மீது அமலாக்கப் பிரிவு சார்பில் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊழல் விவகாரம் தொடர் பாக கடந்த 2013-ல் வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊழல் வழக்கில் ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியது தொடர்பாக அந்நிய செலாவணி மோசடி பிரிவில் எஸ்.பி. தியாகி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வழக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி யுள்ளனர்.
தியாகியின் குடும்ப உறுப்பினர் கள், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன அதிகாரிகள், இடைத்தர கர்கள் உள்பட மொத்தம் 13 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள் ளனர்.
ஹெலிகாப்டரின் உயர வரம்பை எஸ்.பி. தியாகி குறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT