ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஓசி) பகுதி வழியாக தீவிரவாதிகள் நேற்று ஊடுருவ முயன்றனர். அப்போது, அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள். ராணுவம், காவல் துறை இணைந்து நடத்திய இந்த கூட்டு நடவடிக்கையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் சதித்திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஜுமாகுந்த் பகுதியில் கடந்த வெள்ளியன்று ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in