Published : 12 Oct 2017 11:33 AM
Last Updated : 12 Oct 2017 11:33 AM

திருப்பதியில் தள்ளுமுள்ளு: பக்தர்கள் காயம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. நேற்று மதியம் 1.30 மணியளவில், கோயிலின் உட்புற வரிசையில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க சென்று கொண்டிருந்தனர். அப்போது பக்தர்களைச் சோதனையிடும் இடத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதில் தமிழகம், கர்நாடக பக்தர்கள் சிலர் பாதிக்கப்பட்டனர். ‘ஷாக்’ அடித்ததும் பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி யில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தள்ளுமுள்ளுவில் பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். இவர்கள் தேவஸ்தான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x