Published : 15 Jul 2014 10:56 AM
Last Updated : 15 Jul 2014 10:56 AM
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்துக்கு வெறும் ரூ.34 ஆயிரம் மட்டுமே செலவானதாக குண்டூர் எம்.பி. ஜெயதேவ் தனது செலவு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது செலவு கணக்குகளை அஃபிடவிட் மூலமாக சமர்பித்துள்ளனர். இதன்படி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜெயதேவ், தேர்தல் பிரச்சாரத்தின்போது, குண்டூரில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு வெறும் ரூ. 34,350 மட்டுமே செலவானதாக தெரிவித்துள்ளார். இவர் ஆந்திர மாநிலம் குண்டூர் தொகுதியில் போட்டியிட்டார்.
இதேபோன்று, தெலங்கானா மாநிலம் கரீம் நகர் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். இதற்கு வெறும் ரூ. 50 ஆயிரம் மட்டுமே செலவானதாக முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பொன்னம் பிரபாகர் தனது தேர்தல் செலவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT