Published : 26 Oct 2017 12:49 PM
Last Updated : 26 Oct 2017 12:49 PM
ஆக்ராவில் சுவிட்சர்லாந்து தம்பதியினர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உத்தரப் பிரதேச அரசிடம் அறிக்கை கோரியுள்ளார்.
இதுகுறித்த செய்தி ஒன்றை இணைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், ''இந்த விவகாரம் குறித்து தற்போதே அறிந்தேன். மாநில அரசிடம் இதற்கான அறிக்கையைக் கேட்டுள்ளேன்'' என்றார்.
தன்னுடைய அடுத்த பதிவில், ''என்னுடைய அலுவலக அதிகாரிகள் மருத்துவமனையில் உள்ளவர்களை நேரில் சென்று பார்ப்பர்'' என்று தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுவிட்சர்லாந்து தம்பதியினர் குவாண்டின் ஜெர்மி - மேரி ட்ரோக்ஸ். இருவரும் செப்.30-ம் தேதி இந்தியா வந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக ஆக்ரா சென்றனர்.
அங்கே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் கும்பல் ஒன்று இருவர் மீதும் கற்களை வீசித் தாக்கியது. சுமார் 1 மணி நேரம் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT