ஐ.நா.வில் யோகா நிகழ்ச்சி - பிரதமர் மோடி பங்கேற்பு

ஐ.நா.வில் யோகா நிகழ்ச்சி - பிரதமர் மோடி பங்கேற்பு
Updated on
1 min read

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைமையகத்தில் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் யோக அமர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.

யோகா பயிற்சியால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 21-ம் தேதியை யோக தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட ஐ.நா. சபை, ஜூன் 21-ம் தேதி உலக முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படும் என்று 2014 டிசம்பரில் அறிவித்தது.

இந்த நிலையில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் 9-வது சர்வதேச யோகா தின கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் நடைபெறும் யோகா அமர்வுக்கு பிரதமர் மோடி தலையைமையேற்பது இதுவே முதல்முறை.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உள்ள வடக்கு புல்வெளியில் ஜூன் 21-ம்தேதி காலை 8 முதல் 9 மணி வரை சர்வதேச யோகா அமர்வு நடைபெறவுள்ளது. இதில், ஐ.நா.வின் உயர்நிலை அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், உலகளாவிய புலம்பெயர் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in