Published : 23 Jul 2014 12:46 PM
Last Updated : 23 Jul 2014 12:46 PM
பிஹாரில், இஸ்மாயில்பூர் - ரபிகஞ்ச் இடையே ரயில்வே தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர்.
ஆனால், அந்த மார்க்கத்தில் சென்ற பைலட் இன்ஜின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தண்டவாளம் தகர்க்கப்பட்டிருப்பதை கண்டறியப்பட்டது.
இதனால், புவனேஸ்வர் - புது டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாவதில் இருந்து தப்பியது.
நேற்று இரவு 11 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மகதா சரக டிஐஜி பி.கே.ஸ்ரீவஸ்தவா கூறுகையில்: "பைலட் இன்ஜினின் அனைத்து சக்கரங்களும் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு நின்றது. ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த மார்க்கமாக செல்லவிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்திவைக்கப்பட்டது" என்றார்.
மேலும் அந்த மார்க்கத்தில் செல்லவிருந்த 12-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் கயா - முகல்சராய் இடையே ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
சேதம் அடைந்த தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT