இராக்கில் இருந்து மேலும் 200 இந்தியர்கள் திரும்பினர்

இராக்கில் இருந்து மேலும் 200 இந்தியர்கள் திரும்பினர்
Updated on
1 min read

உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள இராக்கில் இருந்து மேலும் 200 இந்தியர்கள் செவ்வாய்க் கிழமை தாயகம் திரும்பினர். இதன் மூலம் தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, “இராக்கின் நஜப் நகரில் இருந்து இராக்கி ஏர்வேஸ் சிறப்பு விமானம் மூலம் 200 இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை டெல்லி வந்துள்ளனர்.

இந்தியர்கள் தாயகம் திரும்பு வற்காக இதுவரை 2,500 பயணச்சீட்டுகள் பயன்படுத்தப்பட் டுள்ளன. இந்தியத் தொழிலாளர் களுக்காக இராக் நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள மேலும் 1000 பயணச்சீட்டுகளை இந்தியத் தூதரகம் பயன்படுத்திக்கொள் ளும்” என்றார்.

உள்நாட்டுப் போருக்கு முன் இராக்கில் சுமார் 10 ஆயிரம் இந்தியர் கள் இருந்தனர். இவர்களில் 7 ஆயிரம் பேர் சண்டை நடைபெறாத இடங்களில் இருப்பதாக கணக் கிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இராக்கில் இருந்து தாயகம் திரும்பியோர் எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் 3 ஆயிர மாக உயரும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in