Published : 10 Jun 2023 05:57 PM
Last Updated : 10 Jun 2023 05:57 PM

ப்ரீமியம்
கோட்சே சர்ச்சை முதல் மல்யுத்த வீரர்கள் முக்கிய முடிவு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 10, 2023

தேசிய விளையாட்டுப் போட்டி விவகாரம்: அமைச்சர் உதயநிதி விளக்கம்: “தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாதது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையாக தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் இது நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் எடுக்க முடிவு: அன்பில் மகேஸ்: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும். வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x