Published : 26 Oct 2017 05:54 PM
Last Updated : 26 Oct 2017 05:54 PM

ஐ.எஸ். தொடர்பா?- சந்தேகத்தின் பேரில் கேரளாவில் மேலும் 2 பேர் கைது

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவைச் சேர்ந்த 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது வியாழக்கிழமை அன்று கண்ணூரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தளசேரியைச் சேர்ந்த ஹம்ஸா மற்றும் மனஃப் ஆகிய இருவர் என்று தெரியவந்துள்ளது. இதில் ஹம்ஸா என்பவர் ஐ.எஸ். இயக்கத்துக்கு முஸ்லிம் இளைஞர்களைச் சேர்ந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் மத போதகர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அக்.25 அன்று சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கே.சி.மிதிலாஜ் (26), எம்.பி.ரஷீத் (23), அப்துல் ரசாக் (24) எனத் தெரியவந்தது. இவர்கள் 4 மாதங்களுக்கு முன்னால் துருக்கி எல்லையில் இருந்து சிரியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். அவர்களை துருக்கி காவல்துறை நாடு கடத்தியது.

இதன்மூலம் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x