Published : 31 Jul 2014 11:05 AM
Last Updated : 31 Jul 2014 11:05 AM
டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். பணியிடங்களில் மகளிருக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்கும் சட்டம் 2013-ன் படி, நீதிமன்ற வளாகங்களில் பாலியல் தொடர்பான புகார் களை விசாரிக்க தனிக்குழு அமைக்குமாறு, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின்படி, டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்க கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை ஏற்று குழு அமைப்பது குறித்து பரிந்துரை அளிக்கும்படி நீதிமன்ற குழுவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடந்த டிசம்பரில் உத்தரவிட்டிருந்தார்.
இக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் மகளிருக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க டி.எஸ்.பண்டாரி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட் டுள்ளார். இதற்கான உத்தரவை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோஹினி பிறப்பித் துள்ளார்.
நீதிமன்ற வளாகங்களில் மகளிருக்கு எதிரான பாலியல் புகார்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும். முகவரி இல்லாமல், அளிக்கப்படும் புகார்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT